Friday, May 12, 2006

கேப்டனின் பீலிங்கி!!!!!!






மலைக்குப் போனாலும் மச்சினன் தயவு வேணும்பாங்க... நம்ம கேப்டன் சட்டசபைக்கு போக துணைக்கு வராத மச்சி சதீஷுக்காக வடிவேலு கணக்கா ஒரே பீலிங்கி ஆகிறார்..... ;-)

4 Comments:

Anonymous Anonymous said...

Thursday May 11, 2006

கொண்டாடக் கூடிய ஒரே ஒரு வெற்றி

வினோத்



ஊரில்லுள்ள அத்துனை தகவல் தொடர்பு தளங்களும் ஒரு கணக்குச் சொல்ல, ஜெயா டிவியில் உட்கார்ந்து கொண்டு ரபி பெர்னார்ட் இரு ஜோக்கர்களுடன், "தற்போது வந்துள்ள தகவலின் படி அதிமுக பல தொகுதிகளிலும் முண்ணணியில் இருக்கிறது ...." என்று சொல்லிக் கொண்டிருந்தார் - மூஞ்சியை சிரியஸாக வைத்தவாறே......

ஜெயலலிதா இவரை போன்றவரை தூர தூர விரட்டாவிட்டால் எத்தனை தேர்தல் வந்தாலும் ஜெயிப்பது கடினம்.


சன் டிவி நியூஸ்ஸில் கலந்துரையாடல் நாகரீகமாக அற்புதமாக இருந்தது. "இலவச அறிவிப்பு சரியான ஒரு முன்னுதாரணமா...?" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது ஆச்சரியமான ஒன்று.

கலாநிதி தயாநிதி மாறன்கள் ஏன் தொழிலில் வெற்றி பெற்றார்கள் என்பதை இது தெளிவுபடுத்தியது. வாழ்த்துக்கள்.


வெற்றியில் நூறு ஓட்டுக்கும் ஒரு லட்சத்திற்கும் வித்தியாசம் கிடையாது. வெற்றிதான் கணக்கு. அது படி, பல தொகுதிகளில் நூறு ஐந்நூறு என்றே வெற்றி வித்தியாசம் இருந்தாலும்


காங், கம்யூ, பாமக என பல பெருந்தலைகளுடன் தேர்தலைச் சந்தித்தாலும் திமுக முக்கி முனகித் தான் ஆட்சியைப் பிடித்துள்ளது.

என்னைப் பொறுத்தவரை முதலில் சற்று அதிக தொகுதிகளில் திமுக ஜெயிக்கவே ஏதுவாக இருந்தது. ஆனால் கருணாநிதியின் தொடர் இலவச அறிவிப்பு படித்த மேல்தட்டு மக்களை அதிகமாக வாக்குச் சாவடிக்கு அழைத்தது.... ஆனால் அவர்கள் இந்தக் கூற்றின்மேல் இருந்த வெறுப்பால் இரட்டை இலைக்கு வாக்குகளைத் தள்ளி விட்டார்கள்.


சங்கராச்சாரியார் விஷயத்தால் பிறாமணாள் அதிமுகவிற்கு ஆப்பு அடிப்பார்கள் எனும் எண்ணத்திற்கு சிரிக்க சிரிக்க மயிலாப்பூரில் ஆப்பு வைத்தார்கள்.


இனமானப் பேராசிரியர் முக்கி முண்டி 450 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கோட்டையில் ஜெயித்து வந்தார்.

நாளைய திமுக முதல்வர் ஸ்டாலின் வெறும் 2000 வாக்கு வித்தியாசத்தில் தான் ஜெயிக்கிறார்.

கருணாநிதி கொண்டாடிய திருவெல்லிக்கேணி நாகநாதனுக்கு டாட்டா...


சைதை, தி.நகரில் கூட திமுக கூட்டணி வரமுடியாதது கொஞ்சமும் எதிர்பாராததே...


திமுக கோட்டை புட்டுக்கினு போகும் படி ஒட்டளித்தாலும், கவனமாக ஆலந்தூரில் மந்திரியாக இருந்த வளர்மதியை (அதிமுக ) கவனமாக மக்கள் தோற்கடித்தார்கள்.


தமிழக மக்கள் அற்புத தீர்ப்பு இது. இது ஒரு ஆரம்பம். இனி துதிபாடி ஒருகட்சி ஆட்சிக்குத் தமிழகத்தில் தடா...

அதே சமயம் ஒன்று தெளிவாகத் தெரிகிறது... அத்துனைக் கட்சிகள் சேர்ந்த்தாலும் அதிமுகவை விட ஆயிரம் ஓட்டுக்கள் தான் அதிகம் பெற முடிகிறது.

அதே சமயம் தனக்கு ஆசை ஆசையாய் ஓட்டுப் போட வரும் பலரை தூர விரட்டியடிக்கும் அளவிற்கு ஜெயலலிதாவின் அலட்சிய பழகுதல் தன்மையுள்ளது.


ஆழ்ந்து பார்த்தால் திமுக மேல் பயம் கொண்டுள்ள தமிழக மக்கள் ஜெயலலிதாவின் ஏதேச்சிகாரத்தினால் தந்துள்ள ஒரு இரண்டும் கெட்டான் நிலைப்பாடே இது.


அதனால் , தன் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்களுக்காக ஜெ ஒரு சீரிய எதிர்கட்சியாக செயல்பட வேண்டும்.


இதில் தமிழக மகா ஜோக்கராய் தென்படுபவர், தமிழக காங்கிரஸ் தலைவர்....

"இது மாபெரும் வெற்றி..... மிகப் பிரமாண்டா வெற்றி... என்பதாய்...." எப்படி.... சுதந்திர அடைந்தகாலத்திலிருந்து காங்கிரஸ் வென்ற தொகுதிகளை தொலைத்து தோற்று விட்டு... அதுவும் திமுக நிழலில் ஒளிந்து கொண்டு....

அவரது கட்சி பெரிசு தொண்டாமுத்தூரில் ஜெயித்தாரா என்றே தெரிய இரவாச்சு ( எஸ்.ஆர்.பி. புட்டுக்கினாரு... எல்லாம் behavior தந்த முடிவு.... )

இந்த லட்சணத்தில் ஜெயலலிதாவைக் கிண்டல் செய்து பேட்டி...


காங்கிரஸ் அழிவுப்பாதையில் அழுத்தமாக தன் முதல் காலடியை எடுத்து வைத்துள்ளது.

உடனடியாக சுதாரித்தல் நன்று......


அதே சமயம்... மதுரையில் பிறந்து.. சென்னையில் வாழும் விஜயகாந்த் தன்னை வேரறுக்கத் துடிக்கும் பாமக கோட்டையில் உள்ளே சென்று ராம்தாஸ் நண்பரையே தோல்வி பெற செய்துள்ளார்.

அரசியல் வரலாற்றில் , கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோருக்குப் பின் தேர்தல் களத்தில் இவர்தான் இப்படியொரு வெற்றி பெற்றவர்.


இவர் கட்சியின் பல தொகுதி மூன்றாவது நிலை காங்கிரஸிற்கு ஒரு அபாய அறிவிப்பு. நாளை திமுக அதிமுக கூட்டணிக்கு முதலில் இவரிடம் தான் தூது விடும். காங்கிரஸ் இனி ஒரு கடந்தகால சமாச்சாரம் ஆகிவிடும் சுதாரிக்காவிட்டால்.


இனியாவது சோனியாகாந்தியிடமிருந்து தமிழக காங்கிரஸ் விட்டு விடுதலையாக வேண்டும்.


ஊரே ஒருமுறை ஜெயலலிதாவிற்கு எதிராய் இருந்த போது ஊடே புகுந்து சந்தில் சிந்துபாடி தன்னை ஒரு சக்தியாய் காட்டி கொண்ட ரஜினிகாந்து இனி கை சொடக்கி பேச வெட்கப்படனும். ரஜினி தினமும் ஒரு முறை விஜயகாந்த் புகைப்படத்தில் கண்விழித்து தைரியம் வரவழைத்துக் கொள்ளலாம்.....

அரசியலுக்கு வராவிட்டாலும் இரவில் பாத்ரூமிற்கு போகவாவது உதவும்.


சிங்கத்தின் குகையில் சென்று அதன் அடங்காத அதன் பிடரியை பிடித்து ஆட்டி, அதன் தாடையில் சும்மா நச்சுன்னு ஒரு குத்து விட்ட விஜயகாந்திற்கு வாழ்த்துக்கள்.

--------------

வினோத்


vinod_29_2004@yahoo.com



திண்ணையில் வினோத்

1:24 am  
Anonymous Anonymous said...

விஜயகாந்த் ஸ்பெஷல் - Friday, May 12, 2006



சூப்பர் ஸ்டார் ரஜினி விஜயகாந்த்
விருத்தாசலம் தொகுதியை சவால் விட்டு பிடித்தார் விஜயகாந்த். இதன் மூலம் பா.ம.க., கோட்டைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.தே.மு.தி.க., கட்சியை துவங்கிய நடிகர் விஜயகாந்த், தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்டார். விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார். வன்னியர்கள் அதிகம் உள்ள தொகுதியில் எப்படி ஜெயிக்க முடியும் என்று பல தரப்பிலும் கேள்வி எழுந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக பா.ம.க.,வின் கோட்டையான விருத்தாசலத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.

வன்னியர்கள் அதிகமாக வாழும் பகுதியில் அவர்களைத் தவிர மற்றவர்கள் அத்தொகுதியில் வெற்றிபெறுவது குதிரை கொம்பான விஷயம். அத்தோடு தேர்தலில் பா.ம.க.,வின் சார்பில் டாக்டர் கோவிந்தசாமியும், அ.தி.மு.க.,வின் சார்பில் காசிநாதன் என்பவரும் போட்டியிட்டனர். இவர்கள் இருவருமே வன்னியர்கள். ஆனால், விஜயகாந்த் 61 ஆயிரத்து 337 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி 13 ஆயிரத்து 777 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் விஜயகாந்த்தை தோல்வியடைய செய்ய, அரசியல் கட்சிகள் அனைத்து அஸ்தரங்களையும் பயன்படுத்தினர்.

பேட்டி:
தேர்தலுக்குப் பின்னர் சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற நிலை ஏற்பட்டுள்ளதற்கு எனது அரசியல் பிரவேசமே காரணம். வெற்றி கிடைக்காவிட்டாலும் பல தொகுதிகளில் கணிசமான வாக்குகள் அளித்து எனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சித் தொண்டர்கள் சிறப்பாகப் பணியாற்றினார்கள். நான் 5 முதல் 10 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்.

அ.தி.மு.க.வின் தோல்விக்கு காரணமா?

அ.தி.மு.க. அணி தோல்வி அடைய நாங்கள் காரணமா என்பதை நான் சொல்ல முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் 5 ஆண்டுகள் இரு கட்சிகளும் மாறி, மாறி தான் ஆட்சி செய்து வருகின்றன. அந்த வகையில் மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்திருந்தது தெரிகிறது.

சட்டமன்றத்துக்கு தவறாமல் சென்று பணியாற்றுவேன். இந்த ஆட்சியாளர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்பேன். ஒரு கை ஓசை எந்த அளவுக்கு எதிரொலிக்கும் என்று தெரியவில்லை. ஆனாலும் நான் தனித்தே செயல்படுவேன். தேவை ஏற்பட்டால் போராடுவேன்.

கூட்டணி ஏற்படுத்தாதது தவறு என்று நினைக்கிறீர்களா?

இல்லை. தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதை விரும்பித்தான் செய்தோம். இரு கட்சிகளும் (அதிமுக, திமுக) கூட்டணி குறித்து பேசினர். அடுத்த தேர்தலில் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும்.

அரசியலிலிருந்து விலகல் ?

இவ்வளவு ஓட்டுகள் கிடைத்த பிறகு நான் ஏன் அரசியலில் இருந்து விலக வேண்டும். தொடர்ந்து கட்சியை வளர்க்க பாடுபடுவேன். அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு ஒரு மாற்று கட்சியாக உருவாக பாடுபடுவேன். தேர்தலில் இரு அணிகளும் எங்களை கூட்டணியில் சேர அழைத்தன. ஆனால் நான் தான் முடியாது என்று கூறிவிட்டேன்.

நடிகர்கள், டைரக்டர்கள் ஆகியோர் எனக்கு எதிராக பிரசாரம் செய்ததை எல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்.டி.ஆர், எம்.ஜி.ஆர். போன்றவர்கள் கட்சி தொடங்கி வெற்றி பெற்ற போதெல்லாம் இவ்வளவு கட்சிகள் இல்லை. எம்.ஜி.ஆருக்கு காங்கிரஸ் ஆதரவு இருந்தது. ஆனால் இப்போது எத்தனை கட்சிகளை எதிர்த்து, யாருடைய ஆதரவும் இன்றி நான் போட்டியிட்டிருக்கிறேன் என்பதே பெரிய விஷயம்.

பாமக கோட்டையில் நீங்கள் வெற்றி பெற்றது குறித்து ?

கோட்டை என்பது எல்லாம் வெறும் மாயை. சென்னை திமுக கோட்டை என்றார்கள் இன்று அதிமுக பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

நிர்வாகிகளிடம் பேசி முடிவு எடுப்போம்.

சினிமாவில் தொடர்ந்து நடிப்பீர்களா அல்லது முழு நேர அரசியலில் ஈடுபடுவீர்களா?

அரசியலில் ஈடுபடும் அதேவேளையில் சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன்.

நீங்கள் தமிழகம் முழுவதும் சுற்றி வந்தீர்கள் மக்கள் பிரச்சினை என்ன?

குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்பதுதான் முக்கியப் பிரச்சினை.
முதல்- அமைச்சராக கருணாநிதி பதவி ஏற்றதும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பேன் என்றார்.

பாதிப்புகள்
தமிழக சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் கட்சி பல தொகுதிகளில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க. போன்ற கட்சி வேட்பாளர்களின் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சில

* விஜயகாந்த்தின் தே.மு.தி.க. வேட்பாளர் தர்மன் 48,522 ஓட்டுகள் பெற்றது அரசியல் கட்சியினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

* நெல்லை சட்டசபை தொகுதியில் அமைச்சர் நயினார் நாகேந்திரன் (அ.தி.மு.க), தி.மு.க. வேட்பாளர் மாலை ராஜாவை விட 606 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் கட்சி வேட்பாளர் ஜெயச்சந்திரன் 4 ஆயிரத்து 80 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

*இதே போல சேரன்மாதேவி தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க.வேட்பாளர் பால்மனோஜ் பாண்டியன் காங்கிரஸ் வேட்பாளர் வேல்துரையை விட 6 ஆயிரத்து 32 ஓட்டுகள் குறைவாகப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் கட்சி வேட்பாளர் ராஜேந்திரநாதன் 8 ஆயிரத்து 122 ஓட்டுகள் பெற்றார்.

*மொடக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனிச்சாமியை விட அ.தி.மு.க.வேட்பாளர் நமச்சிவாயம் 4 ஆயிரத்து 60 ஓட்டுகளே குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் விக்டோரியா 10 ஆயிரத்து 711 ஓட்டுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

*பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பொன்னுதுரை, இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் பெரியசாமியை விட 8 ஆயிரத்து 578 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் ரவிச்சந்திரன் 18 ஆயிரத்து 212 ஓட்டுகள் பெற்றார்.

*இதேபோல கோபிச்செட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் (அ.தி.மு.க) தி.மு.க.வேட்பாளர் மணிமாறனை விட 4 ஆயிரத்து 19 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் நடராஜன் 10 ஆயிரத்து 875 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

*பவானி தொகுதியில் பா.ம.க.வேட்பாளர் ராமநாதனிடம், அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பண்ணன் 5 ஆயிரத்து 103 ஓட்டுகள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் கோபால் 17 ஆயிரத்து 1 ஓட்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

*சேடபட்டி தொகுதியில் முன்னாள் அமைச்சர் துரைராஜ் (அ.தி.மு.க) 2 ஆயிரத்து 49 ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று தி.மு.க. வேட்பாளர் தளபதியை தோற்கடித்தார். இந்த தொகுதியில் நிறுத்தப்பட்ட விஜயகாந்த் கட்சி வேட்பாளர் சாமுண்டீஸ்வரி 11 ஆயிரத்து 99 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

*அரியலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பாளை அமரமூர்த்தி, அ.தி.மு.க. வேட்பாளர் ரவிச்சந்திரனை 4 ஆயிரத்து 194 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் ஜெயவேல் 8 ஆயிரத்து 630 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இதே போல ஆண்டிமடம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் என்.கே.பன்னீர்செல்வம் தி.மு.க.வேட்பாளர் சிவசங்கரிடம் 5 ஆயிரத்து 828 ஓட்டுகள் குறைவாக பெற்று தோற்றார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் எம்.கே.பன்னீர்செல்வம் 10 ஆயிரத்து 954 ஓட்டுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

* ஜெயங்கொண்டம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் குரு, அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரனிடம் 3 ஆயிரத்து 57 ஓட்டுகள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சியின் வேட்பாளர் ஜான்சன் 6 ஆயிரத்து 427 ஓட்டுகள் பெற்றுள்ளார். உடுமலைப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகவேல், தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை விட 3 ஆயிரத்து 963 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் ஞானசம்பந்தன் 9 ஆயிரத்து 183 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

* ராசிபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சுந்தரம், தி.மு.க. வேட்பாளர் ராமசாமியை விட 4 ஆயிரத்து 966 ஓட்டுகளே குறைவாக பெற்று தோல்வி அடைந்தார். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் ராஜா கவுண்டர் 11 ஆயிரத்து 991 ஓட்டுகள் வாங்கினார்.


* பொள்ளாச்சி தொகுதியில் அமைச்சர் ஜெயராமன் (அ.தி.மு.க), தி.மு.க. வேட்பாளர் சாந்தி தேவியை 2 ஆயிரத்து 946 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் மீனாட்சி சுந்தரம் 7 ஆயிரத்து 543 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

* நிலக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் தேன்மொழி காங்கிரஸ் வேட்பாளர் செந்தில்வேலை விட 6 ஆயிரத்து 284 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் ரவிச்சந்திரன் 16 ஆயிரத்து 745 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


* வரகூர் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசி, பா.ம.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை விட 2 ஆயிரத்து 543 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் கணபதி 10 ஆயிரத்து 303 ஓட்டுகள் பெற்றார்.

* இதே போல கம்பம் தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் ராமகிருஷ்ணன், தி.மு.க. வேட்பாளர் செல்வேந்திரனை விட 1958 ஓட்டுகள் அதிகம் பெற்று தி.மு.க.வேட்பாளரை தோற்கடித்தார். அந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் ஜெகநாத் 12 ஆயிரத்து 360 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

* போடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் லட்சுமணன், அ.தி.மு.க.வேட்பாளர் பார்த்திபனை விட 898 ஓட்டுகள் மட்டுமே அதிகம் பெற்று வென்றார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் அட்சயகண்ணன் 4 ஆயிரத்து 973 ஓட்டுகள் பெற்றார்.

* தொட்டியம் தொகுதியில் இதே போல காங்கிரஸ் வேட்பாளர் ராஜசேகரன், ம.தி.மு.க. வேட்பாளர் நடராஜனை 53 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் வென்றார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் மனோகரன் 12 ஆயிரத்து 445 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஆலங்குடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் ராஜசேகரன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தை விட 9 ஆயிரத்து 151 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாலும் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் செல்வின்ராஜ் 16 ஆயிரத்து 739 ஓட்டுகள் வாங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.

* அமைச்சர் ராதாகிருஷ்ணன் திருமயம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்புராமிடம் 314 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் தனது வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்தின் தே.மு.தி.க. வேட்பாளர் முருகேசன் 7 ஆயிரத்து 863 ஓட்டுகள் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

* இதேபோல மேட்டுப்பாளையம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னராஜ், தி.மு.க.வேட்பாளர் அருண்குமாரை விட 142 ஓட்டுகளே கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் விஜயகாந்தின் கட்சி வேட்பாளர் சரஸ்வதி 10 ஆயிரத்து 77 ஓட்டுகள் பெற்றிருக்கிறார்.

* அவினாசி தனித் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பிரேமா, இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் ஆறுமுகத்தை விட 4 ஆயிரத்து 539 ஓட்டுகள் அதிகம் பெற்று வென்றார். ஆனால் இங்கு விஜயகாந்த் கட்சி வேட்பாளர் அனந்தராஜ் 14 ஆயிரத்து 567 ஓட்டுகள் பெற்றுள்ளார்.

* இதே போல பாலக்கோடு தொகுதியில் அமைச்சர் அன்பழகன், பா.ம.க.வேட்பாளர் மன்னனை 4 ஆயிரத்து 844 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாலும், விஜயகாந்த் கட்சி வேட்பாளர் விஜயசங்கர் 11 ஆயிரத்து 882 ஓட்டுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

* திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பன், அ.தி.மு.க. வேட்பாளர் உமாதேவனை விட 5 ஆயிரத்து 627 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வென்றார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி 12 ஆயிரத்து 111 ஓட்டுகள் பெற்றது.

* அருப்புக்கோட்டை தொகுதியில் இதே போல தி.மு.க. வேட்பாளர் தங்கம் தென்னரசு, அ.தி.மு.க. வேட்பாளர் முருகனை விட 8 ஆயிரத்து 234 ஓட்டுகள் அதிகம் பெற்று வென்றாலும், விஜயகாந்த் கட்சி வேட்பாளர் கமலி பாரதிதாசன் 13 ஆயிரத்து 836 ஓட்டுகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

* உசிலம்பட்டி தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளர் மகேந்திரன், தி.மு.க.வேட்பாளரை விட 3 ஆயிரத்து 254 ஓட்டு அதிகம் பெற்று வெற்றி பெற்றாலும் இங்கு விஜயகாந்த் கட்சி 9 ஆயிரத்து 670 ஓட்டுகள் பெற்றிருக்கிறது.

* தி.மு.க.பொதுச் செயலாளர் க.அன்பழகன் துறைமுகம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சீமாபஷீரை விட 410 ஓட்டுகளே அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்தின் தே.மு.தி.க. வேட்பாளர் சந்திரபிரகாசம் 4 ஆயிரத்து 781 ஓட்டுகள் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது.

* இதே போல ஆலந்தூர் தொகுதியில் அமைச்சர் வளர்மதி தி.மு.க.வேட்பாளர் அன்பரசனிடம் 17 ஆயிரத்து 872 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இங்கு விஜயகாந்தின் கட்சி வேட்பாளர் விஜயகுமார் 22 ஆயிரத்து 866 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

* தாம்பரம் தொகுதியில் இதே போன்று விஜயகாந்த் கட்சி வேட்பாளர் தர்மா 48 ஆயிரத்து 522 ஓட்டுகள் பெற்று ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ராஜா, ம.தி.மு.க. வேட்பாளர் சோமுவை 48 ஆயிரத்து 606 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


* இதேபோல புரசைவாக்கம் தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் ஜாக்குலின் ஜோம்ஸ் 12 ஆயிரத்து 690 ஓட்டுகள் பெற்று இருக்கிறார். இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பாபு, அ.தி.மு.க.வேட்பாளர் வெங்கடேஷ்பாபுவை விட 7 ஆயிரத்து 369 ஓட்டுகளே அதிகம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

* பெரம்பூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மகேந்திரன், ம.தி.மு.க.வேட்பாளர் மணிமாறனை 2 ஆயிரத்து 788 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி 15 ஆயிரத்து 881 ஓட்டுகள் பெற்றுள்ளது.

* தி.மு.க.துணைப் பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில், அ.தி.மு.க.வேட்பாளர் ஆதிராஜாராமை விட 2 ஆயிரத்து 468 ஓட்டுகள் அதிகம் பெற்று வென்றார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் தளபதி 5 ஆயிரத்து 545 ஓட்டுகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

* இதேபோல மைலாப்பூர் தொகுதியில் நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர் நெப்போலியனை தோற்கடித்தார். ஓட்டு வித்தியாசம் 1667தான். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் பெற்ற ஓட்டு 7 ஆயிரத்து 441 ஆகும்.

* சைதாப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளர் செந்தமிழன் பா.ம.க.வேட்பாளரை விட 5ஆயிரத்து 905 அதிகம் பெற்று வெற்றி பெற்றாலும், இங்கு விஜயகாந்த் கட்சி வேட்பாளர் 11 ஆயிரத்து 675 பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

* கும்மிடிப்பூண்டியில் விஜயகுமார் (அ.தி.மு.க), பா.ம.க. வேட்பாளர் ஜெயவேலுவை விட 229 ஓட்டுகளே அதிகம் பெற்றார். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி 21 ஆயிரத்து 738 ஓட்டுகள் பெற்றிருக்கிறது.

* இதேபோல திருவொற்றியூர் தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் கே.பி.பி.சாமி, அ.தி.மு.க வேட்பாளர் மூர்த்தியை 3 ஆயிரத்து 447 ஓட்டுகளில் தோற்கடித்தாலும் இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் முருகன் 21 ஆயிரத்து 915 ஓட்டுகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

* மதுராந்தகம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் காயத்ரிதேவி, அ.தி.மு.க.வேட்பாளரை விட 3 ஆயிரத்து 375 ஓட்டுகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்றிருந்தாலும் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் கஜேந்திரன் 9 ஆயிரத்து 811 ஓட்டுகள் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

* மதுரை மத்தி தொகுதியில் கடந்த முறை தேர்ந்து எடுக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. நன்மாறன் ம.தி.மு.க.வேட்பாளர் பூமிநாதனை 51 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் தோற்கடித்துள்ளார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் தாமோதரன் 18 ஆயிரத்து 632 ஓட்டுகள் வாங்கியிருக்கிறார்.

* வீரபாண்டி தொகுதியில் அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமி, தி.மு.க.வேட்பாளர் ராஜேந்திரனிடம் 1638 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி 28 ஆயிரத்து 254 ஓட்டுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

* அதே போல சேலம்-2வது தொகுதியில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அ.தி.மு.க.வேட்பாளர் சுரேஷ்குமாரை விட 14 ஆயிரத்து 742 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாலும் விஜயகாந்த் கட்சி இங்கு 20 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

* ராஜபாளையம் தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளர் சந்திரா, தி.மு.க.வேட்பாளர் ராஜனை விட 493 ஓட்டுகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி 10 ஆயிரத்து 251 ஓட்டுகள் பெற்றுள்ளது.

* தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவருமான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், ம.தி.மு.க. வேட்பாளரும், அக்கட்சியின் பொருளாளருமான மு.கண்ணப்பனிடம் 9 ஆயிரத்து 874 ஓட்டு வித்தியாசத்தில் தோற்று உள்ளார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் 37 ஆயிரத்து 448 ஓட்டுகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

* அதேபோல சிங்காநல்லூர் தொகுதியில் ஐ.என்.டி.யூ.சி. வேட்பாளர் (அ.தி.மு.க. கூட்டணி) சின்னசாமியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரும், சி.ஐ.டி.யூ தொழிற்சங்க பொதுச் செயலாளருமான சவுந்திரராஜன் 14 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இங்கு விஜயகாந்த்தின் கட்சி வேட்பாளர் 31 ஆயிரத்து 268 ஓட்டுகள் வாங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


* திருச்சி:திருச்சி மாவட்டத்தல் திருச்சி 1, திருச்சி 2, முசிறி, உப்பிலியபுரம், லால்குடி, ஆகிய தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளால் அதிமுக வேட்பாளர்களுக்கும், மருங்காபுரியில் திமுக வேட்பாளர் ரொக்கையா மாலிக் என்கிற சல்மாவுக்கும், ஸ்ரீரங்கத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெரோம் ஆரோக்கியராஜுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

* புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி தொகுதியில் 3-வது இடத்தை பிடித்தது.

* திருமயம், புதுக்கோட்டை, குளத்தூர்(தனி) தொகுதிகளில் 4-வது இடத்துக்கு வந்தது.

* மதுரை மாவட்டத்தில் விஜயகாந்தின் தேமுதிக 1,81,512 வாக்குகள் பெற்றுள்ளது.

* தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், தூத்துக்குடி, கோவில்பட்டி, சாத்தான்குளம், விளாத்திகுளம் ஆகிய 5 தொகுதிகளிலும் தே.மு.தி.க. வேட்பாளர்கள் 3-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

* ஓட்டப்பிடாரம் (தனி), ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் தே.மு.தி.க.வுக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது. மாவட்டம் முழுவதும் 7 தொகுதிகளிலும் சேர்த்து பதிவான 7,44,243 மொத்த வாக்குகளில் தே.மு.தி.க. 38,423 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது 5.16 சதம் ஆகும்.

* இம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டி தொகுதியில் தே.மு.தி.க.வுக்கு 11,633 வாக்குகள் கிடைத்துள்ளன.இது மொத்தம் பதிவான வாக்குகளில் 10.16 சதம் ஆகும். இந்தத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் வாக்குகளைக் கணிசமாகத் தன்பக்கம் இழுத்துள்ளது தே.மு.தி.க. இதனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்படும் கோவில்பட்டி தொகுதி இம்முறை அ.தி.மு.க. வசமாகியுள்ளது.

* வேலூர் மாவட்டத்தில் உள்ள 12 சட்டப் பேரவை தொகுதிகளிலும் தேமுதிக மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. இக்கட்சி வேட்பாளர்கள் மாவட்டத்தில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 145 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

* அதிகபட்சமாக குடியாத்தம் தொகுதியில் 16.94 சதவீத வாக்குகளையும், குறைந்தபட்சமாக ராணிப்பேட்டை தொகுதியில் 5.39 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

* பிற தொகுதிகளில் இக்கட்சி பெற்ற வாக்குகள் சதவீதம் வருமாறு - வேலூர் 7.05, சோளிங்கர் 9.34, ஆர்க்காடு 6.88, காட்பாடி 5.61, பேரணாம்பட்டு 9.35, வாணியம்பாடி 7.56, நாட்றம்பள்ளி 5.77, திருப்பத்தூர் 6.38, அரக்கோணம் 6.53, அணைக்கட்டு 5.57.

* குடியாத்தம் தொகுதியில் விஜயகாந்த்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ் 20 ஆயிரத்து 557 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தினமலர் கிரப்பிக்ஸ்



தேர்தலுக்கு முன்:
விஜயகாந்த் பேட்டி- 1
விஜயகாந்த் பேட்டி - 2
விஜயகாந்த் பேட்டி - 3

வீட்டுக்கு ஒரு பசு மாடு

விஜயகாந்த் தேர்தல் அறிக்கை

விஜயகாந்த் பற்றி கலைஞர்:
.. புதிதாகக் கட்சி தொடங்கியிருக்கிற விஜயகாந்த், ஊர் ஊராகப் போய் '40 எம்.பி.க்களும் வேஸ்ட்!' னு மக்களிடம் கடுமையாகப் பேசி வருகிறாரே?"

"அது அவராகப் பேசுகிறார் என்று நான் கருதவில்லை. தவிர, அவரைப் பத்தி என்னனு சொல்றது... அவரு ஹார்ம்லெஸ்!"

விஜயகாந்த் பற்றி நம்புங்கள் நாராயணன்:-
* விஜயகாந்த்தின் கட்சிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. தனித்துப் போட்டியிடுவதாக அவர் கூறி வந்தாலும் கூட அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையை அவர் எடுப்பார். அமைச்சராகும் யோகமும் அவருக்கு உள்ளது.

கடைசியாக விஜயகாந்த் வீடியோ : பார்க்க இங்கே
[ posted by Idly Vadai @ 6:50 PM ] [ 13 comments ] [#]

1:55 am  
Anonymous Anonymous said...

Hail Captain!

Captain Vijayakanth has achieved what Vai.ko, PMK and others failed to achieve. In his very first election, he has won by a margin of 14000+ votes. And he has split lots of votes. Wish his popularity gains, and he becomes a better alternative for DMK/ADMK and his party wins more seats in the future.

In my opinion, the biggest gainer of this election will be Congress. Now MK cannot bargain that much with the central government. If he tries something there, there will be an immediate impact to his government in TN. Its a win-win situation for Congress. There were rumours of MK trying to form a 3rd front with help of Chandrababu Naidu, Mulayam Singh, Left etc. Now he cant afford to do that

Needless to say, the biggest losers are PMK. Good for TamilNadu Vaiko-> Politics vittu go!

And more importantly. Chennai no more a DMK forte!

Ok. For us, whats the change? In chennai the police security will shift from Poes Garden to Gopalapuram. Kannagi statue will be reinstated. Sun TV/Thamizh Murasu/Dinakaran will become the official(pseudo) media CAS will remain for ever. Sarath Kumar/Radhika might realise their mistakes and cry in Sun TV like devayani, and request Thamizhina thalaivar to forgive them. Sun TV will do what Jaya TV was doing, Jaya TV will do what Sun TV was doing. In all government offices, JJ’s photo will be replaced with MK’s photo. Other than that, nothing

2:12 am  
Blogger மஞ்சூர் ராசா said...

அவரு ஃபீலிங் இருக்கட்டும், இப்ப அம்மா என்ன ஃபீலிங் பண்றாங்கன்னு கொஞ்சம் போய் பாருங்கப்பா?

7:20 am  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home